பேருவளையில் சிறியளவில் நிலநடுக்கம்!

பேருவளையை அண்டிய கரையோரப் பகுதியில் இன்று வியாழக்கிழமை(30.03.2023) பிற்பகல் 3.7 மெக்னிடியூட் அளவில் சிறியளவான நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளமையைப் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பேருவளையிலிருந்து சுமார் 24 கிலோமீற்றர் தொலைவில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகப் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதன் காரணமாகச் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.