தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்குப் பணம் கோரி மீண்டும் கடிதம்!

தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்காகப் பணம் வழங்குமாறு கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்தார்.

குறித்த கடிதத்தின் பிரதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

அச்சு நடவடிக்கைகளுக்கான பணத்தைப் பெற்றுத் தருமாறு கோரி இதற்கு முன்னர் நிதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய போதிலும் அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.