வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் உடைப்பு: விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு


வவுனியா - வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளைவிக்கப்பட்ட சேதம் தொடர்பில்  விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு  உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொல்பொருள் திணைக்களத்துடன் வவுனியாவிலும், கொழும்பிலும் இரண்டு சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும், இன்னும் பிரச்சினை தொடர்கிறது. வனப் பாதுகாப்புத்  திணைக்களத்துடனும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன.

அவ்வாறான பிரச்சினைகள் வடக்கில் மாத்திரமன்றி வடமத்திய மாகாணத்திலும், மொனராகலை மாவட்டத்திலும் உள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.