ஈழத்துச் சித்தர் யோகர் சுவாமிகளின் 59 ஆவது ஆண்டு குருபூசை நிகழ்வு குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் கடந்த சனிக்கிழமை(01.04.2023) பக்திபூர்வமாக நடைபெற்றது.
காலை-10 மணி முதல் கூட்டு நற்சிந்தனை மற்றும் திருமுறைப் பாராயணம் என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து நண்பகல்-12 மணிக்குச் சிறப்புப் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றதுடன் இறுதியாக அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் மற்றும் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள், அடியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(செ.ரவிசாந்)

.jpg)
.jpg)
.jpg)
