குப்பிழான் வீரமனை நாயகி கெளரித் தாய்க்கு நாளை கொடியேற்றம்

யாழ். குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை- 26 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல்-11 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ் ஆலய மஹோற்சவத்தில் அடுத்த மாதம்- 02 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை-05 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 03 ஆம் திகதி புதன்கிழமை இரவு-07 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 04 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள்-05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்-11 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் இரவு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் என மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.  

இதேவேளை, மஹோற்சவ காலங்களில் வழமை போன்று தினமும் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.  



( செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)