ஊரெழு வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் சித்திராப் பூரணை விரத வழிபாடு

யாழ். ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் நாளை வெள்ளிக்கிழமை(05.04.2023) சித்திராப் பூரணை விரத வழிபாடு இடம்பெறவுள்ளது. 

நாளை காலை-08 மணியளவில் விநாயகப் பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி, வெளிவீதி உலா இடம்பெறும். மதியம் ஆலயத்தில் சித்திரைக் கஞ்சி வழங்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.