யாழ்.நகரில் நாளை வருடாந்த இரத்ததான முகாம்

சிறிலங்கா ரெலிக்கொம் மொபிற்றல் நிறுவன யாழ்.கிளையின் ஏற்பாட்டில் வருடாந்த இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை(17.06.2023) காலை-08.30 மணி முதல் மாலை-03 மணி வரை யாழ்.நகர் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள மேற்படி நிறுவன அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.