அதிபர் சேவையின் மூன்றாம் தரப் புதிய நியமனங்களுக்குத் தடை!

                        


இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்குரிய புதிய நியமனங்கள் வழங்குவதைத்  தடுத்து உயர்நீதிமன்றம் இன்று புதன்கிழமை(28.06.2023) இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பிலான மனு சுமன சந்ர தேரரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போதே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.