கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்

யாழ். கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய சோபகிருது வருட மஹோற்சவப் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(14.08.2023) முற்பகல்-11 மணியளவில் அடியவர்களின் அரோகராக் கோஷங்களுக்கு மத்தியில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 


கொடியேற்றத்தைத் தொடர்ந்து வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமானும், விநாயகப் பெருமானும் அலங்கார ரூபமாக உள்வீதி, வெளி வீதி உலா வரும் திருக்காட்சி இடம்பெற்றது.    

இதேவேளை, தொடர்ந்தும் பதினெட்டுத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.