யாழ்.பல்கலைக்கழகத்தில் நாளை கருத்துரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் ஏற்பாட்டில் மலையகத் தமிழர்களின் வரலாற்றைக் கட்டமைப்பதிலும் கட்டவிழ்ப்பதிலும் காண்பியச் சுவடிகள் எனும் தலைப்பிலான கருத்துரை நிகழ்வு நாளை திங்கட்கிழமை(14.08.2023) பிற்பகல்-02 மணி முதல் மாலை- 04 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடக் கட்டடத் தொகுதியின் கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது,

குறித்த நிகழ்வில் ஆய்வாளரும், பத்திரிகையாளருமான சரவணன் கோமதி நடராஜா கலந்து கொண்டு கருத்துரை நிகழ்த்துவார்.