பூதகண வாகனத்தில் நல்லூர் வேற்பெருமான் திருவீதி உலா

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழாவின் பதினெட்டாம் திருவிழா மாலை உற்சவம் இன்று வியாழக்கிழமை(07.09.2023) மாலை சிறப்பாக நடைபெற்றது.  

இன்று மாலை வசந்தமண்டபப் பூசை, கொடித்தம்பப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லூர்க் கந்தப் பெருமான், வள்ளி- தெய்வயானை சமேதரராக பூதகண வாகனத்தில்  ஆயிரக்கணக்கான அடியவர்கள் புடைசூழ உள்வீதியிலும், மாலை-06 மணியளவில் வெளிவீதியிலும் உலா வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.


(செ.ரவிசாந்)  


  .