நல்லூர்க் கந்தன் மஹோற்சவப் பெருந் திருவிழாக் கால அருளுரை

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழாக் காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் அருளுரை நிகழ்வு கார்த்திகைத் திருவிழாவான நாளை செவ்வாய்க்கிழமை(05.09.2023) முதல் இவ் ஆலயத் தீர்த்தோற்சவமான எதிர்வரும்-14 ஆம் திகதி வியாழக்கிழமை வரை தினமும் இரவு-07.45 மணி முதல் 08.15 மணி வரை இல 692, பருத்தித்துறை வீதி, நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீன மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அந்த வகையில் நாளையதினம் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் கலந்து கொண்டு "மனித வாழ்வின் மகத்துவம்" எனும் தலைப்பில் உரையாற்றுவார்.