யாழில் கொட்டிய மழை

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று செவ்வாய்க்கிழமை (26.09.2023) காலை-10.15 மணி முதல் முற்பகல்-11.45 மணி வரை கடும் மழை பெய்துள்ளது. இதன்பின்னரும் இடையிடையே மிதமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடும் மழையினால் குறித்த நேர காலப் பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.  

இதேவேளை, நேற்றுத் திங்கட்கிழமை(25.09.2023) தென்மராட்சியின் சில பகுதிகளிலும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 


(செ.ரவிசாந்)