கோண்டாவிலில் நாளை குடைச் சுவாமிகளின் குருபூசை நிகழ்வு

ஈழத்துச் சித்தர் குடைச் சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு நாளை புதன்கிழமை (06.09.2023) கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள குடைச் சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.

நாளை காலை-08.30 மணியளவில் கூட்டுப் பிரார்த்தனை ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் குருபூசை நிகழ்வுகள் இடம்பெற்றுத் தொடர்ந்து நண்பகல் விசேட அன்னதானமும் நடைபெறுமென மேற்படி ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.