வல்லிபுர ஆழ்வாருக்கு நாளை கொடியேற்றம்

 


வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம் நாளைய தினம் 14.09.2023 காலை 8. 45 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 16 நாட்கள் இடம்பெறவுள்ள உற்சவத்தில் விசேட திருவிழாக்களாக எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெண்ணைத் திருவிழாவும், 23 ஆம் திகதி சனிக்கிழமை துகில் திருவிழாவும், 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாம்பு திருவிழாவும், 25 ஆம் திகதி திங்கட்கிழமை கம்சன் போர் திருவிழா , 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேட்டைத் திருவிழாவும்,
27ஆம் திகதி புதன்கிழமை சப்பற திருவிழாவும், 28 ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும், 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமுத்திரத் தீர்த்த திருவிழாவும், 30 ஆம் திகதி சனிக்கிழமை கேணித்தீர்த்தமும் இடம்பெற்று அன்று மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது. திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன.
ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் இடம்பெறவுள்ள மகோற்சவ பெருவிழாக்களில் அடியார்களுக்கான வசதிப்படுத்தல்களை கோவில் நிர்வாகத்தினருடன் இணைந்து வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தினரும் பருத்தித்துறை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பருத்தித்துறை பிரதேச சபை ஆகியன ஆலய சூழலில் பாதுகாப்பான குடிநீர், சுற்றுச்சூழல் தூயமைப்படுத்தல் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.