யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி சந்திக்கருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
உடுப்பிட்டி சந்தியில் இன்று காலை இந்த போராட்டம் அப்பகுதி மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.
மதுபானச்சாலை அமைந்துள்ள குறித்த பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் இந்த மதுபானசாலை அகற்றப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த போராட்டத்தில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.