குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் அறநெறிச் சொற்பொழிவும் கூட்டுப் பிரார்த்தனையும்

 

அறநெறிச் சொற்பொழிவும் கூட்டுப் பிரார்த்தனையும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை(06.10.2023) மாலை-04 மணி முதல் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில்  இடம்பெற்றது.    

நிகழ்வில் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவச் சிறார்கள் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மேற்படி ஆச்சிரமப் பொறுப்பாளர் எஸ்.சிறிதரன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் அறநெறிச் சொற்பொழிவாற்றினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் சொற்பொழிவிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டுச் சரியாகப் பதிலளித்த மாணவர்களுக்குப் பாராட்டுக்களும் வழங்கப்பட்டன.


வீதியால் நடந்து செல்லும் முதியவரொருவர் திடீரென நிலத்தில் விழுந்தால் மாணவர்கள் செயற்படும் முறை தொடர்பில் இந் நிகழ்வில் நடித்துக் காட்டப்பட்டது. இதன்போது உதவும் மனப்பான்மையுடன் துரிதமாகச் செயற்பட்ட  மாணவனைப் பாராட்டி ஓய்வுநிலைக் கிராம சேவகர் சோ.பரமநாதனால் ஊக்குவிப்புப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது. 

அத்துடன் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது. 

(செ.ரவிசாந்)