உயர்தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரி மாதம்-04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும், பரீட்சை தொடர்பான நேர அட்டவணை எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருந்தும் இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாத விண்ணப்பதாரிகள் ஒன்லைன் மூலமாக விண்ணப்பிக்க இந்த மாதம்-06 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பிலான மேலதிக தகவல்களை 1911 எனும் துரித தொலைபேசி இலக்கத்துடனோ, 0112784208 அல்லது 0112784537 அல்லது 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்திப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.