சுன்னாகம் பொதுநூலகத்தில் நாளை சித்த மருத்துவக் கருத்துரையும் நூல் அறிமுகமும்

"பெண்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்குச் சித்த மருத்துவம்" எனும் தலைப்பிலான கருத்துரை நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை(31.10.2023) பிற்பகல்-02.30 மணியளவில் சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் உடுவில் பிரதேச சித்த மருத்துவர் திருமதி.ஜெ.ரத்னலஜியால் ஆற்றப்படவுள்ளது. 

அதனைத் தொடர்ந்து எங்கட புத்தகங்கள் வெளியீடான மைதிலி ரெஜினோல்ட்டின் "ஓட்டிச உலகில் நானும்....தன் வரலாறு" எனும் நூலின் அறிமுகம் திருமதி.பகீரதி கணேசதுரையால் நிகழ்த்தப்படவுள்ளது. 

(செ.ரவிசாந்)