கீரிமலையில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்


விதையனைத்தும் விருட்சமே குழுமத்தினரின் ஏற்பாட்டில் 36 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (19.11.2023) காலை-08.30 மணி முதல் மாலை-03.30 மணி வரை கீரிமலை கருகம்பனை கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு உயிர்காக்கும் உன்னத பணியில் இணைந்திட முன்வருமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.

(செ.ரவிசாந்)