குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்தக் கேதாரகெளரி விரதப் பூசையின் பூர்த்திநாள் வழிபாடுகளும், காப்புக் கட்டும் வைபவமும் நாளை திங்கட்கிழமை (13.11.2023) சிறப்பாக இடம்பெறவுள்ளது.
நாளை காலை-07 மணியளவில் உபயகாரர் சங்கல்பத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து விசேட அபிஷேக, பூசைகளும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வரும் திருக் காட்சி இடம்பெறுவதுடன் தொடர்ந்து அடியவர்களுக்கு காப்புக் கட்டும் வைபவமும் நடைபெறும்.
(செ.ரவிசாந்)