பாடசாலை மாணவர்களுக்கான இணையவழியிலான சிறப்புக் கலந்துரையாடல்

                             



சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் துரைராசாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான இணையவழியிலான சிறப்புக் கலந்துரையாடல் நாளை  வெள்ளிக்கிழமை(10.11.2023) இரவு-07 மணியளவில் "துப்பறியும் சாம்புவும், செயற்கை நுண்ணறிவும்" எனும் தலைப்பில் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது பாடசாலை மாணவர்களை அறிவியல் ரீதியான சிந்திக்க, செயற்பட ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி கலந்துரையாடலில் மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பொறியியல் மற்றும் கணனி விஞ்ஞானத் துறையின் துறைத் தலைவர் கலாநிதி. உதயசங்கர் தயாசிவம் அதிதிப் பேச்சாளாராகக் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

பேராசிரியர் அழகையா துரைராசா தொடர்பிலான முன்னுதாரணக் குறிப்பினைப் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசியர் கலாநிதி.நவரட்ணராஜா ஆற்றவுள்ளார். நிகழ்வில் கலந்துகொள்வதற்கான சூம் செயலி இணைப்பு Zoom Meeting ID: 675 0395 0277, Passcode: 23@Sirakukal ஆகும்.    

இதேவேளை, இளம் தலைமுறையினருக்குச் சிறந்த முன்னுதாரணங்களை வெளிக்காட்டும் வகையில் பேராசிரியர். துரைராசாவின் பிறந்த தினத்தில் இந்தச் செயற்பாடு சிறகுகள் அமையம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.