யாழில் நாளை மின்தடைப்படும் இடங்கள்....



மின்சாரத் தொகுப்பு பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(09.12.2023) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, யாழ்.கே.கே.எஸ்.வீதி தட்டாதெரு, மாவடி, மனோகரா- நாவலர் வீதி, ஸ்ரீராகவேந்திரா என்ரபிறைசஸ், எவர்கிறீன் அச்சகம், ஹரிகணன் பிறைவேட் லிமிரட், அரசடி வீதி- சீனியர் வீதி, ஐயனார் கோவிலடி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது. 

(செ.ரவிசாந்)