கோண்டாவிலில் நாளை இரத்ததான முகாம்

துர்க்கா விளையாட்டுக் கழக ஸ்தாபகர் அமரர்.தம்பித்துரை சிவராஜாவின் நினைவாக கோண்டாவில் துர்க்கா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(14.01.2024) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை கோண்டாவில் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான காம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.