கொக்குவிலில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

கொக்குவில் பொற்பதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (28.01.2024) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-02.30 மணி வரை கொக்குவில் பொற்பதி விநாயகர் ஆலயத்தின் முன்பாக உள்ள தனியார் இல்லத்தில் நடைபெறவுள்ளது.    

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்கள் மற்றும் ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர். மேலதிக தகவல்களுக்கு 0776554910 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(செ.ரவிசாந்)