கோண்டாவிலில் நாளை குடைச் சுவாமிகளின் குருபூசை

ஈழத்துச் சித்தர் குடைச் சுவாமிகளின் வருடாந்தக் குருபூசை நிகழ்வு நாளை சனிக்கிழமை (17.02.2024) கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் ஆலய வளாகத்திலுள்ள குடைச் சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது.

நாளை காலை-07 மணிக்குப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து திருவாசக முற்றோதல் நிகழ்வு ஆரம்பமாகி நடைபெறும். தொடர்ந்து முற்பகல்-11 மணிக்கு குருபூசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் பூசை வழிபாடுகளும் அதனைத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுமென ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ.சிவகதிர்காமநாதக் குருக்கள் தெரிவித்துள்ளார். 

(செ.ரவிசாந்)