கீரிமலை நகுலேஸ்வர சுவாமி மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்

ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று சனிக்கிழமை(24.02.2024) முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்தும் 15 தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா இடம்பெறவுள்ளது.


அடுத்த மாதம்-07 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு-08.30 மணியளவில் சப்பரத் திருவிழாவும், மகா சிவராத்திரி நன் நாளான 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-09.30 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள் சனிக்கிழமை காலை-07 மணியளவில் கீரிமலை கண்டகி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறுமென மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ ந.குமாரசுவாமிக் குருக்கள் தெரிவித்தார்.