அரியாலை சிவ நாகம்பிரான் அலங்கார உற்சவம் ஆரம்பம்

அரியாலை கிழக்கு ஸ்ரீ சிவ நாகம்பிரான் ஆலய வருடாந்த  அலங்கார உற்சவம் நேற்றுப் புதன்கிழமை (28.02.2024) காலை அபிஷேகத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ் ஆலய அலங்கார உற்சவம் நடைபெறும். அலங்கார உற்சவ காலங்களில் தினமும் காலை-09.30 மணிக்கு அபிஷேகமும், முற்பகல்-11.40 மணிக்குப் பூசை வழிபாடுகளும், பிற்பகல்-12.10 மணியளவில் வசந்தமண்டபப்  பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து சிவ நாகம்பிரான் உள்வீதி உலா வரும் காட்சியும் இடம்பெறும். பத்தாம் நாள் உற்சவமான அடுத்தமாதம்-08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட மங்கள வாத்தியங்கள் சகிதம் சிவ நாகம்பிரான் உள் வீதி, வெளிவீதி உலா வரும்  திருக் காட்சியும் நடைபெறும்.