அரியாலை கிழக்கு ஸ்ரீ சிவ நாகம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நேற்றுப் புதன்கிழமை (28.02.2024) காலை அபிஷேகத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ் ஆலய அலங்கார உற்சவம் நடைபெறும். அலங்கார உற்சவ காலங்களில் தினமும் காலை-09.30 மணிக்கு அபிஷேகமும், முற்பகல்-11.40 மணிக்குப் பூசை வழிபாடுகளும், பிற்பகல்-12.10 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து சிவ நாகம்பிரான் உள்வீதி உலா வரும் காட்சியும் இடம்பெறும். பத்தாம் நாள் உற்சவமான அடுத்தமாதம்-08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட மங்கள வாத்தியங்கள் சகிதம் சிவ நாகம்பிரான் உள் வீதி, வெளிவீதி உலா வரும் திருக் காட்சியும் நடைபெறும்.