குப்பிழான் காளி கோயில் அலங்கார உற்சவம் வைகாசி-12 இல் ஆரம்பம்

"காளி கோயில்" என அழைக்கப்படும் குப்பிழான் வடபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் வைகாசி மாதம்-12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை-06 மணியளவில் விசேட அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக மேற்படி ஆலய பரிபாலனசபையின் தலைவர் பரராஜசிங்கம் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ் ஆலய அலங்கார உற்சவம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(செ.ரவிசாந்)