யாழ்.நகரில் நாளை வருடாந்த இரத்ததான முகாம்

பிரதேச அபிவிருத்தி வங்கி வடமாகாண ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் காலமான வங்கியின் வடமாகாண ஊழியர்களான தெய்வேந்திரம் பகீசன், தனிக்க சஞ்சீவ சுமணதாச      ஆகியோரின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (02.03.2024) காலை-09 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை யாழ்.நகரில் அமைந்துள்ள பிரதேச அபிவிருத்தி வங்கியின் யாழ்ப்பாணக் கிளை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.