கோப்பாயில் நாளை இரத்ததான முகாம்

கோப்பாய் தெற்கு தூய மரியன்னை ஆலய இளையோர் மன்றத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (16.03.2024) காலை-09 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை மேற்படி ஆலய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.