வல்வெட்டித்துறையில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் 75 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(03.03.2024) காலை-09 மணி தொடக்கம் வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும். வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம், வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலை, நெடியகாடு கணபதி மஹால் ஆகியன இந்த இரத்ததான முகாம் நிகழ்விற்கு இணை அனுசரணை வழங்குகின்றன.  

மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.