தாவடி வேதவிநாயகர் பாலஸ்தாபன கும்பாபிஷேகம்

தாவடி ஸ்ரீ வேதவிநாயகர் ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை (22.04.2024) அதிகாலை-05.58 மணி முதல் காலை-07.22 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் இடம்பெறவுள்ளது. 

அடியவர்கள் விநாயகப் பெருமானின் திருப்பணிக்கு இயன்றளவு நிதியுதவி, பொருளுதவி, சரீர உதவி புரிந்து விரைவில் மகா கும்பாபிஷேகம் காண ஒத்துழைப்பு வழங்குமாறு மேற்படி ஆலயத் திருப்பணிச் சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.