கோண்டாவில் கிழக்கு மகாகாளி அம்பாள் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ மகாகாளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.2024) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் நடைபெறும். 


இவ் ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 22 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09.30 மணியளவில் தேர்த் திருவிழாவும், 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.