இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண மாநாடு

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வடமாகாண மாநாடு நாளை வியாழக்கிழமை (04.04.2024) பிற்பகல்-01.30 மணி முதல் யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டல் சங்கிலியன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.