நாவாந்துறையில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

அமரர்.செபமாலை ஜெறின்சனின் மூன்றாவது  ஆண்டு நினைவாக சென்.மேரிஸ் இளைஞர் கழகம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (21.04.2024) காலை-09 மணி முதல் நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு உதிரம் கொடுத்து உயிர்கள் காக்க முன்வருமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.