யாழ்.பல்கலைக்கழகத்தில் நாளை இரத்ததான முகாம்

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை வியாழக்கிழமை (02.05.2024) காலை-09 மணி தொடக்கம் மாலை-04 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பொது அறையில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.