யாழில் 25 இந்திய மீனவர்கள் கைது!


இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்தியாவின் தமிழக  மீனவர்கள் இன்று திங்கட்கிழமை (01.07.2024) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களின் நான்கு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந் நிலையில் கைதான 25 மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. விசாரணைகளைத் தொடர்ந்து 25 மீனவர்களும் கடற்தொழில்  நீரியல்வளத்துறைத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இந் நிலையில் கைதானவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.