கோண்டாவிலில் குடைச் சுவாமிகளின் குருபூசை

 


ழத்துச் சித்தர் குடைச் சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை  (02.07.2024) கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள குடைச் சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் நடைபெறவுள்ளது.  

நாளை காலை-08.30 மணியளவில் கூட்டுப் பிரார்த்தனை ஆரம்பமாகித் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் குருபூசை நிகழ்வுகளும், தொடர்ந்து விசேட அன்னதானமும் இடம்பெறுமென மேற்படி ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.