வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் காம்யோற்சவப் பெருவிழாவின் திருக்கலாச வாகனத் திருவிழா இன்று வியாழக்கிழமை (25.07.2024) இரவு சிறப்பாக நடைபெறவுள்ளதாக மாவை ஆதீனகர்த்தா மகாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை-04 மணிக்கு 108 சங்காபிஷேகத்துடன் திருக்கைலாச வாகனத் திருவிழா ஆரம்பமாகும். மாலை-05:15 மணியளவில் சாயரட்சைப் பூசையும், மாலை-06 மணியளவில் ஷண்முகார்ச்ச னையும், மாலை-07 மணியளவில் கலைநிகழச்சியும், மாலை-07:30 மணியளவில் இரண்டாம் காலப் பூசையும் இடம்பெறும். இரவு-07.45 மணியளவில் வசந்த மண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து இரவு-08.30 மணியளவில் மாவைக் கந்தப் பெருமான் புதிதாக அமைக்கப்பட்ட திருக்கைலாச வாகனத்தில் வெளிவீதி உலா வரும் திருக்காட்சியும் இடம்பெறும்.
(செ.ரவிசாந்)