நீடிக்கப்பட்டது நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்களின் விளக்கமறியல்!

                                   

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும்-18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த 22 இந்தியாவின் தமிழக  மீனவர்களும் கடந்த மாதம்- 22 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தனர். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 22 இந்திய மீனவர்களும்  நீதவான் நளினி கந்தசாமி முன்னிலையில் 22 இந்திய மீனவர்களும் நேற்றையதினம் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.