இம் முறை நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமை(06.12.2024) நள்ளிரவுடன் நிறைவடைவதாக இலங்கைத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த முறை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 8361 வேட்பாளர்களில் இதுவரை 1985 பேர் மாத்திரமே வருமானம் மற்றும் செலவு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். 690 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களில் இதுவரை 106 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் மட்டுமே உரிய சமர்ப்பிப்புகளைச் செய்துள்ளன. தேசிய பட்டியலில் அறிவிக்கப்பட்ட 527 வேட்பாளர்களில் 57 பேர் மாத்திரமே வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.