யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையால் வருடம் தோறும் நடாத்தப்படும் சைவநெறி மற்றும் தமிழ்மொழியும் நுண்ணறிவும் தேர்வுகள் நாளை சனிக்கிழமை (25.01.2025) காலை-08 மணியளவில் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.
மேற்படி தேர்வுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தங்கள் பாடசாலைகள் ஊடாகப் பங்குபற்றுமாறு சைவபரிபாலன சபையின் பரீட்சைச் செயலாளர் வி.தயாபரன் தெரிவித்துள்ளார். இவ் வருடம் குறித்த பரீட்சைக்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் மாணவர்கள் தோற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.