சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவுடன் விதையனைத்தும் விருட்சமே குழுமம் இணைந்து தென்மராட்சிப் பொது அமைப்புக்களின் அனுசரணையுடன் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை( 19. 01. 2025) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-02.30 மணி வரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் தேவையுடைய குருதிக் கொடையாளர்களுக்குப் போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் தவறாது கலந்து கொண்டு பங்களிப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.