யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவும் குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு சேவ் ஏ லைவ் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்து நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை புதன்கிழமை (22.01.2025) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நிறுவன அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.