குப்பிழான் வடக்கு சொக்கவளவு சோதிவிநாயகப் பெருமான் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு வரும் திங்கட்கிழமை 03.02.2025 காலை 6.30 - 7.30 மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெற உள்ளது.
பாலஸ்தாபன கிரியைகள் யாவும் ஆலய பிரதமகுரு கிரியா கலாபமணி சிவஸ்ரீ சி. கிருஷ்ணசாமிக்குருக்கள் தலைமையில் இடம்பெறும்.
ஆலய திருப்பணி வேலைகளை விரைவாக செயற்படுத்தி முடிக்க வேண்டியுள்ளதால் அடியவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்புகளை வழங்கி உதவுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுள்ளனர்.