'வடலி அம்மன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை (11.02.2025) காலை-09 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இதேவேளை, நாளை மறுதினம் புதன்கிழமை (12.02.2025) காலை-09.30 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், மாலை-04 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறுமென ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ நா.சிவசங்கரக் குருக்கள் தெரிவித்துள்ளார்.