தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு கோரி ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (11.02.2025) மாலை-04 மணி தொடக்கம் பெளர்ணமி தினமான நாளை புதன்கிழமை (12.02.2025) மாலை-06 மணி வரையும் தொடர் பாரிய போராட்டம் நடாத்தப்படவுள்ளது.