உரும்பிராயில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பு 11 ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நகுலேஸ்வரன் விஜயசன் ஞாபகார்த்தமாக நாளை ஞாயிற்றுக்கிழமை (23.02.2024) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை உரும்பிராய் மேற்கு இளைஞர் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

இரத்ததான முகாம் நிகழ்வில் பங்குபற்றும் அனைவருக்கும் பயனுள்ள மரக்கன்றுகளும், அழகிய தேநீர்க் கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொண்டு உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.