2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இலங்கை அரசால் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்காய் நீண்டகாலமாகப் போராடிய வவுனியாவைச் சேர்ந்த மற்றுமொரு வயோதிபத் தாய் சுகவீனம் காரணமாக இன்று திங்கட்கிழமை (24.02.2025) காலமானார். வேலுசாமி மாரி (வயது-79) என்ற வயோதிபத் தாயே இவ்வாறு காலமானார்.
குறித்த வயோதிபத் தாயின் மகன் கடந்த-2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த வயோதிபத் தாய் கடந்த 16 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு போராட்டங்களிலும் கலந்து கொண்டு தனது மகனுக்காகக் குரல் கொடுத்துள்ளார். குறிப்பாக வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சிமுறைப் போராட்டத்தில் இவர் தொடர்ந்தும் பங்கெடுத்து வந்த நிலையில் குறித்த போராட்டத்தின் 3000 ஆவது நாளான இன்று இவர் உயிரிழந்துள்ளார்.